பணியாளர்களுக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை? – கொழும்பு மாவட்ட கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு!

Monday, April 13th, 2020

கொழும்பு நகரில் மூடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்கள் இயங்கத் தொடங்கும் போது அவற்றில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளதா என பரிசோதிக்கும் பீ.சீ.ஆர். பரிசோதனை செய்யப்படும் என கொழும்பு மாவட்ட கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

பணியாளர்கள் மீளவும் பணிகளுக்கு திரும்பும் போது முதலில் இந்த பரிசோதனையை நடத்தி அதன் பின்னர் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும் அவற்றில் பணியாற்றி வரும் பணியாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வருகை தருவோரின் ஊடாக மீளவும் கொரோனா வைரஸ் தொற்று பரவி விடக் கூடாது என்ற காரணத்தினால் இந்த பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்பட உள்ளதாக கொழும்பு மாவட்ட கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: