பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாளருடன் விஷேட சந்திப்பு!
Wednesday, January 6th, 2021இலங்கைக்கான – பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமொடோர் முஹம்மட் ஷபிஉல் பாரி இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்..
நேற்றையதினம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை!
கடத்தப்பட்ட மாணவர்களை துண்டாக வெட்டி கங்கையில் வீசப்பட்டனர் - நீதிமன்றில் சாட்சியம்!
நெடுந்தீவு வெட்டகளி குளத்தில் 6 இலட்சம் இறால் குஞ்சுகள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்...
|
|