நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன் மரபணு பரிசோதனை -சுகாதார அமைச்சு முன்னெடுக்கத் தீர்மானம்!
Wednesday, April 19th, 2017
நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்கு முன் அவருக்கு மரபணு பரிசோதனை ஒன்றை நடத்தி அதற்கேற்ப சரியான மருந்துகளை வழங்குவதற்கான திட்டமொன்றை சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிக்கும் போது அவரது மரபணு பற்றிய பரிசோதனையை நடத்தி மருந்துகளை வழங்குவது வெற்றியளிப்பதாக அமெரிக்காவில் செய்த ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதே முறையை இலங்கையிலும் பின்பற்றுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருக்கின்றது எனத் தெரியவருகின்றது. விசேடமாக புற்றுநோயாளிகளிடம் மேற்கொள்ளப்படும் மரபணு பரிசோதனைகளின் மூலம் அவர்களின் ஆயுட்காலத்தை 84 வீதம் அதிகரிக்கலாம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - சமுர்த்திப் பயனாளிகளிடம் அறவிட்ட பணத்தை கையாடிய சமுர்த்தி அலுவ...
போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு - தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் மீற முடியாது - அமைச்ச...
தொடர் மழை - கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு - இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் உயர்வு!
|
|
|
ஊழியர்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 18ஆக அதிகரிக்க தீர்மானம் - தேசிய சிறுவர் பாதுகாப்ப...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார் - பலமான நம்பிக்கை இருப்பதாக பொதுஜன ப...
நாளொன்றுக்கு 4 தொன் சுத்திகரிப்பு நிலையம் - சீன முதலீடாக இலங்கையில் நிறுவப்படும் என இலங்கைக்கான ச...


