நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத் திட்டம்!

Friday, January 25th, 2019

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் பெரும் போகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நெல்லுக்காக நிலையான, நியாயமான விலையை பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தை 18 மாவட்டங்களில் முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

சம்பா ரக நெல் 1Kg 41 ரூபாவுக்கும், நாடு ரக நெல் 1Kg 38 ரூபாவுக்கும் உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு தேவையான நிதியை வழங்குவதற்காக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹெரிசன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts: