நெடுந்தீவு பிரதேச ஈ.பி.டி.பியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் யாழ்.மாவாட்ட நிர்வாக செயலாளர்கள் விசேட சந்திப்பு!

Saturday, March 9th, 2019

நெடுந்தீவு பிரதேச மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்மாவட்ட நிர்வாக செயலாளர்கள் நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டனர்.
இன்றையதினம் நெடுந்தீவு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் மற்றும் கட்சியின் யழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஷ்வரன் ஆகியோர் விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் மற்றும் அரசியலில் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.மேலும் இந்த சந்திப்பின் போது உள்ளூராட்சிமன்றத்தின்செயற்பாடுகள் மற்றும் கட்சியினூடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

Related posts: