நெடுந்தீவிற்கு உலங்குவானூர்தி மூலம் வினாத்தாள்கள்!

Thursday, August 16th, 2018

நெடுந்தீவில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் இன்று உலங்குவானூர்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவி வருவதுடன், சில இடங்களில் கடும் காற்றும் வீசுகின்றது. அத்துடன் நாட்டை சுற்றியுள்ள கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன.
இதனால் படகு மூலம் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பரீட்சை வினாத்தாள்களை உலங்கு வானூர்தி மூலம் நெடுந்தீவிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
நெடுந்தீவில் நான்கு மாணவர்கள் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: