நுண் கடன்களிலிருந்து வடக்கு மக்களுக்கு நிவாரணம்!

Sunday, April 1st, 2018

வடக்கு மக்களுக்கு நுண் கடன்களிலிருந்து நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பரிசீலிப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றங்களை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார் என வட மாகாண சபை உறுப்பினரும், யாழ்ப்பாண வணிகர் கழக உப தலைவருமான இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.

Related posts: