நிவாரணப் பொருட்களுடன் கிளிநொச்சி வரும் புகையிரதம்!
Monday, December 31st, 2018வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடனான விசேட ரயில் ஒன்று கொழும்பு கோட்டையில் இருந்து கிளிநொச்சிக்கு செல்ல உள்ளது.
இந்த ரயில் நாளை கிளிநொச்சிக்கு செல்லவுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத் திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
மக்கள் தேவையான நிவாரணப் பொருட்களை இந்த ரயிலிடம் ஒப்படைக்க முடியும். றாகம, கம்பஹா, வெயாங்கொட, மீரிகம, பொல்கஹவெல, குருநாகல், கணேவத்த, மாஹோ, கல்கமுவ, அனுதாரபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் மக்கள் தமது நிவாரணப் பொருட்களை கையளிக்கலாம்.
இலங்கை ரயில்வே திணைக்களம் – ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படவில்லை - மீன்பிடித்துறை அமைச்சர்!
மேல் மாகாணத்திற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பு - ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட 68 பொலிஸ் ...
தலைப்பிறை தென்படவில்லை – நாளை நோன்பு ஆரம்பம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!
|
|