நிலுவையில் உள்ள வீட்டுத்திட்ட கொடுப்பனவுகளை விரைவாக கிடைக்க ஏற்பாடு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன்.

Friday, September 11th, 2020

புதிய வீட்டுத்திட்டம் மற்றும் நிலுவையில் உள்ள வீட்டுத்திட்ட கொடுப்பனவுகளை பயனாளிகளுக்கு விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான
டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் வீடமைப்புத்திட்ட இராஜாங்க அமைச்சர்
இந்திக்க அனுருத்த அவர்களுடன் இன்றயதினம் நடைபெற்ற சந்திப்பின் போது இவ்விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நிரந்தர வீடுகளற்ற மக்கள் மற்றும் கடந்த ஆட்சிக்காலத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டும் அதற்கான நிலுவைப்பணம் வழங்க்காமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது நிலைமைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துரைத்திருந்தார்.

இந்நிலையில் புதிய வீட்டுத்திட்டம் மற்றும் நிலுவையில் உள்ள வீட்டுத்திட்ட கொடுப்பனவுகளை பயனாளிகளுக்கு விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக வீடமைப்புத்திட்ட இராஜாங்க அமைச்சர்
இந்திக்க அனுருத்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: