நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய நடவடிக்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்!

Sunday, April 8th, 2018

நிலக்கண்ணிவெடி அகற்றல் பற்றிய சிறந்த நடவடிக்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேடதூதுவரான இளவரசர் மிரெட் அல் ஹூஸைன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து முகமாலைப் பகுதிக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த பதிவொன்றை மேற்கோள்காட்டி இந்தக் கருத்தைவெளியிட்டுள்ளார்.

Related posts:

வடக்கு மாகாணத்தில் ஆவா குழுவின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள்!: பொலிஸ் உயரதிகாரிகள் யாழில் தெரிவி...
கொரோனா குறித்த தகவல்களை அரசியலாக்காதீர்கள் - அரசியல்வாதிகளிடம் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் கோரி...
ஜெனீவாவில் ஆதரவாக பாகிஸ்தான் இருந்தது போல எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் – பாகிஸ்தான் உயா்ஸ்த...