நியூ டயமன்ட் கப்பல் தீப்பரவல் சம்பவம் – இரண்டு வருடங்களின் பின்னர் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை!
Thursday, August 11th, 2022
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளை கொண்டு சென்ற போது தீப்பற்றலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பலால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இரண்டு வருடங்களின் பின்னர், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான நட்டயீட்டை வழங்க காப்புறுதி நிறுவனத்தினால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதன்காரணமாகவே வழக்கு தொடரவுள்ளதாக என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து மசகு எண்ணெய் ஏற்றி வந்த போது இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் குறித்த கப்பல் தீப்பற்றலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விவசாய உற்பத்தி தொடர்பில் புதிய பொறிமுறையொன்று அவசியம் - அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் ஜனாதிபதியின...
தேர்தலுக்கு பணம் வழங்க ஜனாதிபதி ரணிலின் ஒப்புதலை நாடும் நிதி அமைச்சு!
இவ்வருடம் டெங்கு நோயினால் 37 பேர் உயிரிழப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
|
|
|


