நாளை 7 மணி நேரம் ஊரடங்கு சட்டம் தளர்வு: யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்!

Tuesday, March 31st, 2020

கொரோனா பரவலை கட்டுப்படுத்த யாழ்ப்பாணம்,கொழும்பு, புத்தளம், கண்டி, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்களள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம்  நாளை காலை 6 மணிமுதல் தளர்த்தப்பட்டு பிற்பகல் ஒரு மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 20ஆம் திகதி ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 01, புதன் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கோரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசு கோரிகின்றது.

Related posts: