நாளை முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!
Tuesday, May 15th, 2018பேருந்துக் கட்டணத்தில் திருத்தத்தினை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் நாளை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நூற்றுக்கு 6.56 வீதத்தால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் நடைமுறையிலுள்ள குறைந்த பட்ச கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதென அமைச்சர் ரஞசித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அதிகரித்த எரிபொருள் கட்டணம் காரணமாக பேருந்துக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில் நல்லூரில் நடமாடும் சேவை!
ஏற்றுமதித் துறையில் வளர்ச்சி!
மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - மொத்த பாதிப்பு 27,000ஐ கடந்தது!
|
|