நாளை மறுதினம் O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

Monday, March 26th, 2018

2017ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள்ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் ஏற்றப்படும். அடுத்த நாள் கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும். ஏனையபாடசாலைகளுக்கு அஞ்சலில் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: