நாளை மதியத்திற்குள் பதவி விலக வேண்டும் – சொல்கிறார் முதல்வர்!
Wednesday, June 14th, 2017ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள வடமாகாண சபையின் இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு கோருகின்றேன் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி “வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இருவரும் நாளை மதியத்திற்குள் தாமாகவே பதவி விலகக் கோருகின்றேன்”. என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது. இதன்போதே குறித்த கோரிக்கையை முதலமைச்சர் முன்வைத்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் கலாசார மண்டபம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
வர்த்தமானி மானியில் அறிவிக்கப்பட்ட தொல்பொருள் இடங்கள்!
ஜெனீவா குற்றச்சாட்டுக்கான வரைவு பதில் நாளை மனித உரிமைகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் தி...
|
|