நாளை பிறக்கிறது ஹேவிளம்பி தமிழ் வருடப்பிறப்பு !

Thursday, April 13th, 2017

தமிழ் மக்களின் வருடச் சக்கரத்தில் 31ஆவது வருடமான ஏவிளம்பி வருடம் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு தாண்டி 12.48 இற்குப் பிறக்கிறது.

திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 02.04 இற்குப் பிறக்கிறது.வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், வியாழக்கிழமை இரவு 8.48 தொடக்கம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.48 வரை விஷூ புண்ணிய காலமாகும்.

வியாழக்கிழமை இரவு 10.04 தொடக்கம் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.04 வரை விஷூ புண்ணிய காலமென திருக்கணித பஞ்சாங்கம் கூறுகிறது.

வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், புத்தாண்டு தினத்தன்று மஞ்சள் நிற ஆடையோ, மஞ்சள் அல்லது ஊதா நிற கரை அமைந்த ஆடை அணிவது சிறந்தது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், 14ஆம் திகதி வெள்ளி இரவு 12.09 முதல் 12.31 வரையிலும், 15ஆம் திகதி சனி இரவு 10.38 முதல் 11.38 வரையிலும், 17ஆம் திகதி திங்கள் மு.ப. 9.32 முதல் 11.51 வரையிலும் கைவிசேஷம் செய்யலாம்.

திருக்கணித பஞ்சாங்கத்தின் பிரகாரம், 14ஆம் திகதி வெள்ளி இரவு 8.10 முதல் 9.45 வரையிலும், 15ஆம் திகதி ஞாயிறு இரவு 8.08 முதல் 9.30 வரையிலும், 17ஆம் திகதி திங்கள் மு.ப. 9.45 முதல் 11.00 வரையிலும் கைவிசேஷத்திற்கு சிறந்த நேரங்களாகும்

Related posts: