நாளைமுதல் மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Tuesday, July 13th, 2021மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை 14 ஆம் திகதிமுதல் பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கு கொரோனா ஒழிப்பு தேசிய செயலணியின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், அரச மற்றும் தனியார் பிரிவுகளில் அத்தியாவசிய சேவை நிமித்தம் செல்பவர்கள் மாத்திரமே இவற்றில் பயணிக்க முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார். இதேநேரம் பயணிகள், அரச அல்லது தனியார் நிறுவனங்களின் அடையாள அட்டை அல்லது தாம் செல்லும் பணி தொடர்பிலான ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கில் இ.போ.ச. சாரதிகள் பணிப்புறக்கணிப்பு - பயணிகள் அவதி!
அரசிடமிருந்து மாதாந்த கொடுப்பனவை பெறுவோருக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது – யாழ்ப்பாணத்தி...
ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் - பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொ...
|
|