நாளைமுதல் அனைத்து பாடசாலைளிலும் முழுமையான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம் – விசேட சுகாதார வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தவது தொடர்பிலும் அறிவுறுத்து!

Saturday, November 20th, 2021

பாடசாலைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபம் ஒன்றின் மூலம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள குறித்த வழிகாட்டலுக்கு அமைய –

கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் இனங்காணப்படும் தொற்றாளரை அல்லது சந்தேகத்திற்குரிய நபரை ஏனையோரிடமிருந்து அகற்றி பாடசாலையின் நோயாளர் அறை அல்லது தனிமைப்படுத்திய அறையொன்றில் வைத்தல் அவசியம் என்றும்

குறித்த அறை பாதுகாப்பானதாகவும், காற்றோட்டம் மிக்க இடம் இருக்க வேண்டும் என்பதுடன் குறித்த மாணவர் அல்லது ஊழியர் முகக் கவசம் அணிந்திருப்பது அவசியம் என்பதையும் அவர்கள் பரிவுடனும், அன்புடனும் நடத்தப்பட வேண்டும் டின்றும் வலியுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்/ மாணவியாக இருந்தால் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்குத் தெரியப்படுத்தி, சாத்தியமாகுமாயின், அவர்களை பாடசாலைக்கு அழைப்பதுடன் நோய் அறிகுறியுள்ள மாணவரை அல்லது ஊழியர் தொடர்பில், சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது பொதுச் சுகாதார அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகிக்கப்படும் கொரோனா தொற்றாளர் தொடர்பில், பாடசாலை முகாமைத்துவ கட்டமைப்பை MOH பின்பற்ற வேண்டும் என்பதுடன் அறிகுறிகள் உள்ள தொற்றாளருக்கு கொரோனா தொடர்பான ரெபிட் அன்டிஜன் சோதனையை, அப்பகுதியின் MOH மூலம் ஏற்பாடு செய்தல் அல்லது பாடசாலை அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நபரை ரெபிட் அன்டிஜன் சோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அவர் எப்போதும் பெற்றோர்/ பாதுகாவலர்/ ஆசிரியருடன் இருக்க வேண்டும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: