நாட்டுல் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவு – , நோயாளிகளும் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு
Monday, July 3rd, 2023இலங்கையில் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்று நோயியல் பிரிவின்படி, நேற்று வரை 49 ஆயிரத்து 559 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 10 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 24 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்படுள்ளனர்.
அத்துடன், ஜூன் மாதத்தில் 9 ஆயிரத்து 916 டெங்கு தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது கடந்த ஜனவரி 2023 க்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் பதிவான அதிக எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
ரோமன் கத்தோலிகம் - அங்கிலிகன் திருச்சபைகள் ஒன்றாக இணைகின்றன!
அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி!
நல்லூர் கந்தனுக்கு நாளை இரதோற்சவம் - இன்று சப்பரத்தில் உள்ளக வீதியில் அமைதியாக வலம்வந்து அடியவருக்...
|
|