நாட்டில் மேலும் 22 பேர் கொரேனா தொற்றால் உயிரிழப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Sunday, May 9th, 2021

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் நேற்றையதினம் பதிவாகியுள்ளன.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றையதினத்தில் மாத்திரம் நாட்டில் 1,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில்  ஒரு இலட்சத்த 23 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,335 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை ஒரு இலட்சத்து மூவாயிரத்து தொண்ணூற்றெட்டாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: