நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருகின்றது – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Sunday, April 14th, 2024நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை எக்ஸ் செய்தியொன்றின் ஊடாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எரிபொருள் பாவனை 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
இலங்கையில் சிபெட்கோ, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் கடந்த பருவத்தில் விற்பனை செய்த எரிபொருள் அளவு தொடர்பான தரவுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த மார்ச் மாதத்தில் எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எந்த சந்தர்ப்பத்திலும் அரிசிக்குத் தட்டுப்பாடு வராது - விவசாய அமைச்சர் நம்பிக்கை!
உலக சந்தைகளில் விலை உயர்வு - பிரித்தானியாவில் எரிவாயு விலை 7 வீதத்தால் உயர்வு!
அதிக எரிசக்தியை உற்பத்தி செய்ய இலங்கையில் தொடர்ந்து முதலீடு செய்ய இந்தியா விருப்பம்!
|
|