நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவை இறக்குமதி செய்யப்படும் – மக்கள் அச்சமடைய தேவையில்லை என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!
Monday, December 13th, 2021
அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும் ஒருபோதும் மக்களை பட்டினியில் வைக்கப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஊட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் – ஒரு கிலோ அரிசியின் விலையை 300 ஆக உயர்த்த திட்டங்கள் மேற்கொள்பட்டதாக கூறினார்.
இருப்பினும் அந்த திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, தற்போது 1 கிலோ நாட்டு அரிசி 99.50 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சாதாரண தரப் பரீட்சையில் உயர் தரத்துக்கு தெரிவாகாதவர்களுக்கு உயர்தர தொழில் கல்வி!
வியாழனன்று இலங்கைக்கு வருகிறது 5 இலட்சம் இந்திய கொவிட்-19 தடுப்பூசிகள்!
எரிபொருளுக்கான விலை சூத்திரத்தைக் கொண்டு வருவதற்கு இதுவரையில் எந்தவித கொள்கை ரீதியான தீர்மானமும் மேற...
|
|
|


