நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9000 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Thursday, September 3rd, 2020

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் 12 மாவட்டங்களில், இரண்டாயிரத்து 428 குடும்பங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 853 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் ஆயிரத்து 671 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அனர்த்தங்களினால் 33 வீடுகள் முழுமையாகவும், 555 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் 2 இடர்தங்கல் முகாம்களில், 99 குடும்பங்களை சேர்ந்த 325 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: