நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் ஜூன் 7 வரை சீல் !
Tuesday, June 1st, 2021நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதிவரை முத்திரையிட மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் உடன் அமுலாகும் வகையில் முத்திரையிட(சீல் வைக்க) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் எதிர்வரும் 7 ஆம்திகதிவரை மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
000
Related posts:
அமைதியாக சமாதியை கடந்த பாதயாத்திரை!
சட்டமா அதிபருடன் பிரதமர் அவசர ஆலோசனை!
கொவிட் நோயாளர்கள் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிமுகம்!
|
|