நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் நிறுத்தம்!
Saturday, July 21st, 2018எதிர்வரும்காலத்தில் ஜப்பானில் இருந்து கொள்வனவு செய்யப்படும் வாகன இறக்குமதியை நிறுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரேன்ஜி இதனைத் தெரிவித்துள்ளார்.
கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சினால் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட யூரோ 4 என்ற புதிய ரக எரிபொருளுக்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட புதிய சட்டத்திற்கு அமைய ஜப்பானிய வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் தோன்றியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம்!
ஐந்துமாடிக் கட்டடத்தில் பாரிய தீவிபத்து!
சீரற்ற வானிலை: 64,608 பேருக்கு பாதிப்பு!
|
|