நாட்டின் மொத்த மருந்துத் தேவையில் 90 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Saturday, July 27th, 2024
நாட்டின் மொத்த மருந்துத் தேவையில் 90 சதவீதத்தை எதிர்வரும் ஆண்டிலிருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் பயன்படுத்தப்படும் 200இற்கும் மேற்பட்ட மருந்து வகைகள் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த தொகை மொத்த மருந்து தேவையில் 25 சதவீதமாகும்.
இதற்கிடையில் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சிறுமி ரெஜினா படுகொலை: இரு சிறுவர்கள் சாட்சியம் !
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி!
முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது - சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்...
|
|
|


