நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு தடுப்பு ஊசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, June 8th, 2021

நாட்டின் மொத்த சனத்தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று 12 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் மேல் மாகாணம் உட்பட 9 மாவட்டங்களில் ஏற்கனவே தடுப்பூசி ஏற்றம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சுமார் 23 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதில் மூன்று லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் 2 தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர்.

சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட உள்ள 10 இலட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகளில் இருந்து 8 மாவட்டங்களுக்கு 25 ஆயிரம் தடுப்பூசிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படும். நுவரெலியா ஹம்பாந்தோட்டை அனுராதபுரம் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தலா 50 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கப்பட்டுள்ளது..

இதேவேளை 10 இலட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் நாளை புதன்கிழமை நாட்டுக்கு வந்து சேர உள்ளன.

இந்நிலையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டதை நாளை புதன்கிழமை பிலியந்தல பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: