நாட்டின் பல பாகங்களில் மழையுடனான காலநிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, July 3rd, 2023

நாட்டின் பல பாகங்களில் மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, மேல்,சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வட மத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, வங்காள விரிகுடாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கூறியுள்ளார்.

இதனால் எதிர்வரும் 06.07.2023 வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மேக மூட்டத்துடன் கூடிய வானிலை காணப்படும்

அத்துடன், இக்காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பரவலாக மிதமான மழை கிடைக்கும் எனவும் அவரை் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts:

இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க தூதர் பாராட்டு - 2024 க்கு முன்னர் காணாமல் போனோர் விசாரணைகள் நி...
இருபது இலட்சம் பேரின் சலுகைக்காக 2 கோடி பேரை கஷ்டத்தில் வீழ்த்துவதா - ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன...
தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தங...