நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Saturday, October 8th, 2022
ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கு சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கன மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை கொண்ட காலநிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் மீன் ஏற்றுமதி தடை முழுமையாக நீக்கம்!
சமூகவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் - புத்திஜீவிகள் கோரிக்கை!
பொலிஸாருக்கு தனிப்பட்ட வீடமைப்பு வசதி - பிரதமர்!
|
|
|


