நாட்டின் கனிய வளங்களை விரிவாக ஆராய அவுஸ்திரேலியா ஆதரவு – அமைச்சர் மஹிந்த அமரவீர!
Thursday, February 25th, 2021
புதிய தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பெறுமதிமிக்க கனிய வள ஆய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலீயுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தக் கலந்துரையாடலில் கனிய வள ஆய்வு நடவடிக்கைகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான மாது ஓயாவுக்கு அருகிலுள்ள சதுப்பு நில அமைப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலிய அரசின் உதவியைப் பெறுவது குறித்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதாக சுற்றாடல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
பருத்தித்துறை மருதடிப்பகுதிக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து மோட்டார்க் குண்டு மீட்பு
மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம்!
வரும் திங்களன்று மீண்டும் புதிய அரசாங்கம் அமைகிறது!
|
|
|
இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை மாத்திரம் நியமிக்கும் வேலைத்திட்டம் தயார் -...
மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு - நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் வரலாற்று கண்காட்சி!...
கடற்படையினரை பயன்படுத்தி எல்லை தாண்டும் இந்திய மீன் பிடியாளர்களை கட்டுப்படுத்துங்கள் - அமைச்சர் டக்ள...


