நாடு மீள திறக்கப்பட்டால் பின்பற்றவேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படும் – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Friday, September 24th, 2021அடுத்த வாரத்தில் நாடு மீள திறக்கப்பட்டாலும் அது தொடர்பில் பின்பற்ற வேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்படவுள்ளதாக கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக இன்று முற்பகல் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் பின்னர், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய கலந்துரையாடலில், நாட்டின் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.6 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
000
Related posts:
இராணுவத்தில் ஆறு புதிய மேஜர் ஜெனரல்கள் நியமனம்!
இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் துரிதகதியில் அபிவிருத்தி - அமைச்சர் பிரசன்ன ...
பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு - தடுப்பூசி நடவடிக்கை யாழ் மாவட்டத்தில் நான்காவது நாளாகவும் வெற்றிகரமாக ...
|
|