நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளில் மாற்றம் – சபாநாயகர்!
Thursday, January 5th, 2017
நாடாளுமன்ற விதிகள் மற்றும் நிலையிற் கட்டளைகளில் 2017ஆம் ஆண்டில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக சபாநாகயர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக 2017ஆம் ஆண்டில் அரசாங்கம் புதிய ஆரம்பங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
மேலும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியமை, சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியமை மற்றும் மேற்பார்வை குழுக்கள் ஊடாக நாடாளுமன்றம் சக்திப்படுத்தப்பட்டமை முதலான பணிகள் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு!
தவணை பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச - இந்திய வெளிவிவகார செயலாளர் விசேட சந்திப்பு! – இரு நாடுகளுக்கும் இடையிலான நீ...
|
|