நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் மீண்டும் உரிய திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ளது – பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

Sunday, May 3rd, 2020

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதிக்கு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டால், அன்றைய தினத்தில் இருந்து 14 நாட்கள் கடந்த பின்னர் மீண்டும் உரிய திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

காணப்படும் நிலைமைக்கு அமைய சுகாதார பாதுகாப்புடன் தேர்தல் நடத்த வேண்டும் என்ற போதிலும் மே 10 ஆம் திகதிக்கு பின்னர் அதற்கு பொருத்தமான சூழல் ஏற்பட்டுள்ளதா என்பதை சுகாதார துறையினர் தீர்மானிக்க வேண்டும் என்றும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அப்படியான சூழல் ஏற்படவில்லை என்றால், ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்படும். இதனால், அன்றைய தினத்தில் இருந்து 14 நாட்களுக்கு பின்னர் அதாவது ஜூலை 4 ஆம் திகதியின் பின் தேர்தலை நடத்தும் திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: