நாடாளுமன்றில் விவாதிக்க முடியாமல் போனவை குறித்து சபை முதல்வர்!
 Saturday, June 24th, 2017
        
                    Saturday, June 24th, 2017
            
மருத்துவர்களின் வேலை நிறுத்தம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாமல் போனமை குறித்து சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல விளக்கம் அளித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.இந்த விடயங்களை பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இவற்றை முன்மொழிந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபையில் இருக்காததால் விவாதத்தை நடத்த முடியாமல் போனதென சபை முதல்வர் தொவித்தார். இந்த விடயங்கள் பற்றி விவாதிக்க அரசாங்கம் தயாராகவே உள்ளது. இதற்கு எதுவித ஆட்சேபனையும் கிடையாதென குறித்து சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல விளக்கம் அளித்தார்.
Related posts:
ஒரு இலட்சம் காணி அலகுகள் வழங்கும் வேலைத்திட்டம் - முதற்கட்டத்தில் 20 ஆயிரம் இளம் முயற்சியாளர்களுக்கு...
புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி - பட...
ராஜபக்சவை பழிவாங்க நினைப்பவர்கள் நாட்டை அழிக்காமல் முடிந்தால் ஹம்பாந்தோட்டையில் என்னை தோற்கடியுங்கள்...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        