நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பகட்ட பணிக்கு 75 கோடி ரூபா நிதியை கோரும் தேர்தல் ஆணைக் குழு!

Saturday, June 13th, 2020

ஜுன் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளுக்காக 75 கோடி ரூபா நிதியை பெற்றுத்தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் தேர்தல் செலவீனங்களுக்காக இதுவரை 50 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்குசீட்டு அச்சிடும் நடவடிக்கைகளுக்காக அரச அச்சு திணைக்களத்திற்கு நிதித் தொகையொன்றை ஒதுக்கீடு செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் தனியார் நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ வாக்கு சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 575 கோடி ரூபா நிதி செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: