நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் வேண்டாம் என அமைச்சர் பீரிஸ் அறிவுறுத்து!
Monday, December 13th, 2021நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்ற அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்..
மேலும் இந்த தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்றும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் முதலீடு செய்ய ஐரோப்பிய முதலீட்டு வங்கி விருப்பம் !
சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தினால் கடுமையான நடவடிக்கை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் அதிகாரப் போட்டிகளால் கல்வி பாழடைகின்றது - தமிழர் ஆசிரியர் சங்கம் விச...
|
|