நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, முட்டாள் தனமாக கதைக்காமல் சட்டத்திற்குட்பட்டு கதையுங்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் .
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –
சபாநாயகர் அவர்களே உங்களிடம் சட்டம் படிக்க வேண்டிய தேவையில்லை. இந்தப் நாடாளுமன்றத்தில் சட்ட மூலம் தொடர்பாக நீதிமன்றம் கட்டளை வழங்கியதும் அந்த விடயத்திற்கு அப்பாற்பட்டு சில திருத்தங்களை கொண்டுவரமுடியாது. அந்த விடயப்பரப்புக்குள் திருத்தங்களை கொண்டுவரலாம்.
அதற்கமைய இந்த சட்ட மூலம், திருத்தங்களுடன் நிறைவேற்றியதும் இது தொடார்பாக கேள்வி கேட்பதற்கு உயர்நீதிமன்றத்திற்கும் உரிமையில்லை.
மிகத்தெளிவாக நாங்கள் சொல்லியிருக்கின்றோம், இந்த சட்டமூலம் தொடர்பாக இருக்கக்கூடிய விமர்சனங்களுடன் தேவையான தரப்பினருடன் கலந்துரையாடி இந்த சட்டமூலத்தில் குறைபாடுகள் இருக்குமெனில் திருத்துவதற்கு உடன்பட்டிருக்கின்றோம்
ஆகவே அதனூடாக திருத்தங்களை முன்வைத்து நிறைவேற்றலாம். நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது.
கடந்தவருடம் இந்த நிகழ் நிலையினூடாக பாதிக்கப்படடவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், உயிரிழந்தவர்கள் இருக்கிறார்கள், குடும்பங்கள் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள், குற்றத்தடுப்பு பிரிவுக்கு பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகள் இருக்கின்றன.
சட்டத்திற்கு அப்பால் நின்று உயிரற்றவர்களுக்கு உயிர்கொடுக்க பலர் இருக்கிறார்கள் இவ்வாறு முட்டாள்தனமான கதைகளை சொல்லவேண்டாம், சட்டத்திற்கு உட்பட்டு பேசுங்கள் என மேலும் தெரிவித்துள்ளதுடன் இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் குறைபாடுகள் இருக்குமாயின், அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றில் இன்று (08) முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|