நாடளாவிய ரீதியிலுள்ள கல்வியல் கல்லூரிகளுக்கான  நேர்முகப்பரீட்சை!

Tuesday, March 6th, 2018

கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காகவே மாணவர்கள் கல்வியில் கல்லூரிக்குஅனுமதிக்கப்படவுள்ளனர். இம்முறை வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக மாவட்ட அடிப்படையில் மூன்று மடங்கு மாணவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

நாடு முழுவதிலுமுள்ள 19 கல்வியில் கல்லூரிகளுக்கு 27 கற்கைநெறிகளுக்காக 4ஆயிரத்து 745 பேர் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வியற் கல்லூரி தலைமை ஆணையாளர்கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார். கல்விபீடங்களின் மாவட்ட மட்டத்தில் நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளது.

கல்வியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இம்மாதம் முடிவடைவதற்கு முன்னர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நேர்முகப்பரீட்சைக்காக கடிதங்கள் கிடைக்கப்பெறாதோர் 011 2784818 மற்றும் 0112 784816 என்ற தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்புகொண்டு அது தொடர்பான விபரங்களைகேட்டறிந்துகொள்ளமுடியும்.

இவர்களின் தகுதிக்கு அமைய தேசிய கல்வியற் கல்லூரியில் நேர்முகப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

Related posts: