நவம்பர் 1 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல்!

Saturday, October 30th, 2021

நவம்பர் 1 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய , நவம்பர் 16 ஆம்முதல் சாதாரண தர, உயர்தர பிரத்தியேக வகுப்புகளை 50% திறனில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 1/3 பங்கினருடன் கூட்டங்களை முன்னெடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நேரத்தில் உணவு விடுதிகளுக்குள் அதிகபட்சமாக 75 பேரும், வெளியே 100 பேரும் உணவருந்த அனுமதிக்கப்படுவார்கள்.

அத்துடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய தொடர் அறிவுறுத்தல்களின்படி, கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் நவம்பர் 1 ஆம் திகதிமுதல் அனுமதிக்கப்படும் எனவும் அறிவீக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் மதச் சடங்குகள் போன்றவைகளில் முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: