நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு – நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, November 4th, 2023

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

இதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,565 ஆகும்.

மேலும், 5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 1,431 ஆகும்.

மேலும், 2.3 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 688 ஆகும்.

உலக சந்தையில் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில், லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையை அதிகரித்திருந்தது. எனினும், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர், லிட்ரோ எரிவாயுவின் விலை ஐந்து தடவைகள் திருத்தப்பட்டிருந்த போதிலும், அதில் ஒரு தடவை மாத்திரமே எரிவாயுவின் விலையை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: