நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுகின்ற அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும் -பிரதமர் தினேஸ் குணவர்த்தன நம்பிக்கை!
Wednesday, April 19th, 2023
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுகின்ற அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உள்ளகப் பொறிமுறைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பில் எழுப்பபட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
இதை எதிர்ப்பவர்கள் தங்களுடைய கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். அதற்கான காரணத்தையும் அவர்கள் விலாவாரியாக முன்வைக்கவேண்டும்.
நாடாளுமன்றத்தில் சட்டவரைவு நிறைவேறும்போது அதன் ஊடாகத்தான் அரசு அந்தப் பணிகளை முன்னெடுக்கும். இந்த அரசினுடைய நடவடிக்கை வெற்றியளிக்கும் என்றும் நம்பிக்கை வெளியட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டில் மின்சார நெருக்கடியை தவிர்க்க புதிய திட்டம்!
60 ஏக்கர் வனப்பகுதி தீயினால் அழிவு!
பகிடிவதை சட்டம் - மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கு!
|
|
|


