நடமாட்டக் கட்டுப்பாடு தினங்களில் பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்படும்!

Wednesday, May 19th, 2021

நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும்  எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என விவசாயத்துறை அமைச்சு  தெரிவித்துள்ளது.

அத்துடன், மூடப்படும் பொருளாதார மத்திய நிலையங்கள், மீண்டும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படவுள்ளன.

இதனையடுத்து, மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை மீள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:

யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஒன்றுகூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார நடைமுறையை மீற...
2 இலட்சத்து 31 ஆயிரத்து 982 சாதாரண தர பரீட்சார்த்திகள் உயர்தர கற்கையை தொடர தகுதி - புலமைப்பரிசில் ப...
உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் தலையிடுங்கள் - பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் கல்வி அமைச்ச...