தோப்புக்காடு விளையாட்டுக் கழகத்தின் கட்டடத்துக்கான அடிக்கல்லை ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணன் நாட்டிவைத்தார்!

Tuesday, August 21st, 2018

காரைநகர் தோப்புக்காடு விளையாட்டுக் கழகத்திற்கான நிரந்தர கட்டடத்தின் அடிக்கல்லை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினரமான வீரமுத்து கண்ணன் (ரஜனி) நேற்றையதினம் நாட்டிவைத்துள்ளார்.

கடந்த வருடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுகீட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த கழகத்தின் மைதான புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் கழகத்திற்கு இளைஞர் சேவை மன்றம் வழங்கிய உதவியுடன் நிரந்தர கட்டத்திற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.

பிரதம விருந்தினராக  இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு கலந்து சிறப்பித்த கண்ணன் அடிக்கல்லை நாட்டிவைத்த பின்னர் கருத்து தெரிவிகைகையில் –

எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இப்பகுதியின் அபிவிருத்திக்காக பலவகையான உதவித்திட்டங்களையும் வாழ்வாதார மேம்பாடுகளையும் பெற்றுத்தந்திருக்கின்றார்.

ஆனால் அத்தகைய ஒரு அரசியல் நிலைப்பாடு தற்போது குறைவாக உள்ள நிலையிலும் நாம் எமது அயராத முயற்சிகளால் மக்களுக்கான உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் எமது கட்சியின் கரங்களை நீங்கள் மேலும் பலப்படுத்தும் போது நாம் மேலும் அதிகரித்த வகையில் மக்கள் பணியை தொடர்ந்தும் முன்னெடுக்க அயராது பாடபடுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

39589231_266136550777573_833599155824754688_n 39558081_299622147468498_3766106523776843776_n

Related posts: