தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!
Tuesday, January 26th, 2021
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொழில் உறவுகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தினூடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளம் 1,000 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை செயற்படுத்தும் வகையில் தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை
இந்நிலையிலேயே நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரதமர் ரணில் சீனா பயணம்!
மாணவர்களின் எதிர்காலம் கருதி சுகாதார நிபுணர்களின் ஆலோசனைக்கமையவே மூன்றாம் தவணைக்காக பாடசாலை கற்றல் ந...
விவசாயிகளுக்கு 10,000 ரூபாவுக்கு ஒரு மூடை இரசாயன உரம் - பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானம்!
|
|
|
இலங்கையுடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரி...
மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றதன் பின்னர் ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகள் தொடர்பில் அச்சமடையத் தேவை...
இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...


