தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

Thursday, December 12th, 2019

தொலைபேசிக் கட்டணங்கள் குறைக்கப்படாது இருந்தால் அது தொடர்பில் தெரிவிக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொலைபேசி பாவனையாளர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணத்தின் கீழ் தங்களது தொலைபேசிக் கட்டணங்கள் குறைக்கப்படாமல் இருப்பின் அது தொடர்பில் தமக்கு தெரியப்படுத்துமாறு அந்த ஆணைக்குழு கோரியுள்ளது.

அரசாங்கத்தினால் தொலைபேசிகளுக்காக வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் தத்தமது தொலைபேசி கட்டண பட்டியலில் குறைக்கப்பட்டுள்ளதா எனக் கவனிக்குமாறும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுவான தொலைபேசிக் கட்டணத்துக்கு 37.7 சதவீத வரி அறவிடப்பட்டது. இத் தொகை தற்போது 22.6 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:

பாடசாலைகளின் கல்விச் செயற்பாட்டை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர்கள் ...
பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் - ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து விசேட கட...
கஜகஸ்தானுகு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு !

நாடு நாளை வழமைக்கு திரும்பினாலும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வாய்ப்புகள் இல்லை - தனியார்...
அதிபர் - ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு 24 வருடங்களுக்கு பின்னர் தீர்வு : கல்வி அமைச்சர் தினேஸ் க...
உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை - இ...