தொடர் காச்சல் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!
Sunday, December 24th, 2023யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது!
அதிகாலையில் நால்வர் சுட்டுக்கொலை - பாடசாலை மாணவன் காயம்!
பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது ப...
|
|