தொடர்ந்தும் பணிபகிஷ்கரிப்பு; தொடருந்து சாரதிகள் தீர்மானம்!
Thursday, October 12th, 2017
தமக்கான கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பணிபகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுக்க தொடருந்து சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. தொடருந்து சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்ளும் ஒழுங்கு விதிகள் சீர்த்திருத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடருந்து சாரதிகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடருந்து சாரதிகளின் பணிபகிஷ்கரிப்பினால் ஏற்பட்டுள்ள தொடருந்து தாமதம் காரணமாக பயணிகள் குழப்பமடைந்துள்ளதால் கோட்டை தொடருந்து நிலையத்தில் தீவிர நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.
Related posts:
இம்மாதம் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை!
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
இந்தியா, சீனா, தாய்லாந்துடன் மீண்டும் வர்த்தக ஒப்பந்தம் - பேச்சுக்களை ஆரம்பிக்கிறது இலங்கை!
|
|
|


