தொடருந்துகளுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையில் 600 படையினர் – தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!

Thursday, May 7th, 2020

எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ள தொடருந்துகளுக்கு பாதுகாப்பு வழங்க 600 படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச தனியார் ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இந்த தொடருந்து சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்த தொடருந்துகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் 600 படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து தொடருந்து பெட்டிகளிலும் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக இராணுவப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பரிந்துரைக்கப்பட்ட பயணிகள் தவிர்ந்த ஏனையவர்கள் தொடருந்தில் பயணிப்பதனை தடுக்கும் நோக்கில் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: