தேவையான ஔடதங்கள் கையிருப்பில் – துறைசார் அமைச்சு அறிவிப்பு!
Monday, February 28th, 2022அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான ஔடதங்கள் அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
தனியார் பிரிவுகளுக்கு மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்யும்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெரசிட்டமோல் (Paracetamol) மருந்து உற்பத்தியை துரிதப்படுத்துமாறு உரிய தரப்பிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பரவிவரும் நோய்கள் காரணமாக பெரசிட்டமோல் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பெரசிட்டமோல் மருந்தை மொத்தமாக கொள்வனவு செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லையெனவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மலையாளபுரம் இந்திய வீட்டுத் திட்ட முன்னேற்றம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்ப...
அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களு...
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் ஜானக வக...
|
|