தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் பீரிஸ் அறிவிப்பு!
Tuesday, October 12th, 2021
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மாகாணசபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இதன்மூலம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்த அமைச்சர் பீரிஸ் எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவதைப் போன்று வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்பட போவதில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


